ஒரு நண்பர் வந்தார்.

''உன்னிடம் ஒரு கேள்வி!'' என்றார்.

''கேள்!'' என்றேன்.

''அறிவு என்றால் என்ன?'' என்றார்.

''எனக்குச் சம்பந்தமில்லாத ஒரு விஷயம்!''

''அது எனக்குத் தெரியும்.... அதற்குச் சம்பந்தம் உள்ளவர்கள் அதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதையாவது சொல்லலாமே...?''

''அதை வேண்டுமானால் சொல்கிறேன்... கன்ஃபூஷியஸைப் பார்த்து ஒருவர் இதே கேள்வியைக் கேட்டாராம்... அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?''

''சொல்!''

''தனக்குத் தெரிந்ததைத் தெரியும் என்றும் தெரியாததைத் தெரியாது என்றும் அறிவதுதான் அறிவு''

''இன்றைய மனிதர்கள் தெரியாததைப் பற்றியெல்லாம் தெரிந்தது மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்களே...?''

''என்ன சொல்கிறாய்?''

''சந்திக்காத கடவுளைப் பற்றி சகல புள்ளி விவரமும் தந்து கொண்டிருக்கிறார்களே...!''

''உண்மைதான்... ஒப்புக் கொள்கிறேன்!''

''அப்படியானால் நான் ஒரு கதை சொல்கிறேன்.... கேட்கிறாயா...?''

''சொல்... கேட்கிறேன்!''

நண்பர் கதை சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு பலூன் வானில் பறந்து கொண்டிருந்தது. அதில் ஒருவன் பயணம் செய்து கொண்டிருந்தான்.

அவன் வழிதவறிப் போய் ஒரு வயல்வெளியில் இறங்கிவிட்டான். அது எந்த இடம் என்பது அவனுக்குத் தெரியவில்லை.

அப்போது வயல் வரப்பு வழியாக ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.

நல்லவேளை! வழிகாட்டுவதற்கு ஒருவர் வந்துவிட்டார் என்ற நம்பிக்கையில், ''ஐயா! இப்போது நான் இருக்கும் இடம் எது என்று எனக்குத் தெரியவில்லை.. உங்களுக்குத் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்...'' என்றான்.
அவர் சொன்னார்.

''கோதுமை வயல்களுக்கு நடுவில், ஒரு பெரிய சிவப்பு பலூனில் பாதுகாப்பாக உட்கார்ந்திருக்கிறீர்கள்.''

பலூனில் இருந்தவர் சொன்னார்.

''ஐயா! நீங்கள் ஒரு அக்கவுண்டண்ட் என்று நினைக்கிறேன்!''

''எப்படிக் கண்டுபிடித்தாய்?'' ''நீங்கள் சொன்ன பதில் சரியான புள்ளி விவரங்களுடன் இருந்தது. ஆனால், எதற்கும் உபயோகப்படாமல் இருந்ததே... அதை வைத்துத்தான் Ôஅக்கவுண்டண்ட்Õ என்று கண்டுபிடித்தேன்!''


நண்பர்களே! நம் வாழ்க்கைக்குப் பயன்படாத எந்த ஓர் ஆன்மிக உபதேசமும் நம்மை மேம்படுத்த முடியாது!

Comments

Popular posts from this blog

Working Torrent Trackers list updated Oct 2016...

Language C++----Templates in C++----Part 3

Xender for PC Windows Download : Fast File Transfers