Posts

Showing posts from December, 2013

N.Chokkan books

Image
how Ambani built his business (Tamil Audio) Download

லவகுசா - Lava Kusa--3

Image
லவகுசா பகுதி-16 அம்மாவின் முகத்தில் ஏதோ ஒரு கேள்விக்குறி தொக்கி நிற்பதைக் கண்ட லவகுசர், அம்மா! தாங்கள் எதையோ எதிர்பார்ப்பது போல் உங்கள் முகக்குறிப்பு தெரிவிக்கிறது. உங்களுக்கு என்ன வேண்டுமம்மா? உங்களுக்கு பணிவிடை செய்ய வேண்டியது எங்கள் கடமையல்லவா? தாய் ஆசைப்படும் பொருள் எதுவாகவும் இருக்கட்டுமே! அதை தமையன்மார் கொண்டு வந்து கொடுக்க வேண்டியது புத்திர தர்மம். கேளுங்கள் அம்மா, என்றனர். ராமாயணம் போன்ற இதிகாசங்களை நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியதின் அவசியத்தை இவ்விடத்தில் புரிந்து கொள்ள வேண்டும். ராமன் இருந்தாரா இல்லையா? அவர் பாலம் கட்டினாரா கட்டவில்லையா? என்பது போன்ற விமர்சனங்களை செய்வதை விட, ராமகதையில் வரும் நல்ல கருத்துக்களை இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் பணி மிக மிக முக்கியம். தாய்க்குரிய கடமைகளை பிள்ளைகள் செய்ய வேண்டும், தந்தையின் சொல்லை மதித்து நடக்க வேண்டும், ஒருத்திக்கு ஒருவனாக வாழ வேண்டும் என்பது போன்ற உயர்ந்த தத்துவங்களை ராமசீதா, லவகுசா பாத்திரங்கள் நமக்கு எடுத்துச் சொல்கின்றன. பெற்றவர்களை முதியோர் இல்லங்களுக்கு தள்ளத்துடிக்கும் இளைஞர்கள் லவ

லவகுசா - Lava Kusa --2

Image
லவகுசா பகுதி-7 எதற்கும் கலங்காத அந்த மாவீரன் லட்சுமணன், அப்போதும் குனிந்த தலை நிமிரவில்லை. அண்ணியாரே! தாங்கள் களங்கமில்லா மதிமுகம் கொண்ட என் சகோதரனின் மனைவி. உங்கள் முகம் பார்த்து பேசும் தகுதி எனக்கில்லை. எனக்கு வார்த்தைகளும் வரவில்லை. நான் செய்த பாவத்தின் பலனாக, தங்கள் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்கும் துர்பாக்கியவான் ஆனேன், என்றவன், அவளது திருவடியை வணங்கிவிட்டு, கங்கையைக் கடந்து அயோத்திக்கு விரைந்தான். அவனது தேர் மறைந்தது கண்டு, சீதை கதறினாள். ஐயோ! எனக்கு இதற்கு முன் காட்டில் பாதுகாப்பாக இருந்த இந்த இளையவனும் போய்விட்டானே! நான் பாதுகாப்பற்ற பதுமை ஆகிவிட்டேனே, என அரற்றினாள். ஏ விதியே! இலங்கையில் கொடிய ராவணனின் சிறையில் அடைபட்டுக் கிடந்தது போதாதென்று, இப்போது பெரும்பழியை என் மீது சுமத்தி, இங்கே கொண்டு வந்து சேர்த்தாயோ? இந்த துயரத்திற்கு என்று தான் விடிவு? இந்தப் பிறவியில் உன்னைத் தவிர வேறு யாரையும் தொடமாட்டேன் என எனக்கு சத்தியம் செய்த ராமனே, என் மீது களங்கம் சுமத்தி கானகத்தில் விடச் செய்தாயே! இன்னும் ஏதாவது செய்ய பாக்கி வைத்திருக்கிறாயா? தேவர்களாலு